ETV Bharat / state

பேருந்து நிற்கவில்லை: மதுராந்தகம் அருகே சாலை மறியல்!

author img

By

Published : Dec 26, 2022, 6:33 PM IST

பேருந்து நிற்கவில்லை: மதுராந்தகம் அருகே சாலை மறியல்...
பேருந்து நிற்கவில்லை: மதுராந்தகம் அருகே சாலை மறியல்...

மதுராந்தகம் அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டுமென வேண்டுகோள் விடுத்து கிராம மக்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேருந்து நிற்கவில்லை: மதுராந்தகம் அருகே சாலை மறியல்...

செங்கல்பட்டு: மதுராந்தகம் அடுத்துள்ள சிற்றூர், கள்ளபிரான்புரம். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஊருக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆனால், எந்தப் பேருந்தும் இந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை என்று அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.

அரசுப் பேருந்துகள் மட்டுமல்லாமல், தனியார் பேருந்துகளும் நின்று செல்வதில்லை என்பது இவர்களின் குற்றச்சாட்டு‌. இதனால் கொதிப்படைந்த கிராம மக்கள் இன்று டிச.26 காலை 11 மணியளவில், அந்த வழியாக வந்த தனியார் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், கிராம மக்களை சமாதானப்படுத்தி பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்வதாகக் கூறி அனுப்பி வைத்தனர். இதனால் சில நிமிடங்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: 'தம்பி மல! பில்லு இன்னும் வரல..?' கரூரில் அண்ணாமலையை கலாய்த்து போஸ்டர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.