ETV Bharat / state

கரோனா கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

author img

By

Published : Apr 7, 2020, 1:36 PM IST

ariyalur-collector-visit-control-room
ariyalur-collector-visit-control-room

அரியலூர்: கரோனா வைரஸ் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், பல்வேறு துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஏதுவாகவும் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் எட்டு மணி நேரம் பணிபுரிந்துவருகின்றனர்.

இவர்கள், வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டத்திலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்துள்ள நபர்களை வீட்டில் தனிமைப்படுத்தி, கண்காணித்துவருகின்றனர். மேலும், வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் பணிகளையும் ஒருங்கிணைத்துவருகின்றனர்.

கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு

இந்தப் பணிகள் குறித்து கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், பணியாளர்களுடன் கலந்துரையாடி பணிகள் குறித்து சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதையும் படிங்க:சோதனைச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.