ETV Bharat / sports

பில் இல்லாததால் பாண்டியாவுக்கு நிகழ்ந்த கதி; என்ன ஆச்சு தெரியுமா?

author img

By

Published : Nov 16, 2021, 1:40 PM IST

ஹர்திக் பாண்டியா, Hardik Pandya
ஹர்திக் பாண்டியா

மும்பை விமான நிலையத்தில் முறையான ரசீது இல்லாத காரணத்தால் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம்(Hardik Pandya) இருந்து சுமார் ஐந்து கோடி மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரை முடித்துவிட்டு இந்திய அணியினர் துபாயிலிருந்து நேற்று முன்தினம் (நவ. 14) இரவு மும்பை வந்தனர்.

இந்நிலையில், இந்திய அணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிடம்(Hardik Pandya) இருந்து முறையான ரசீது இல்லாத காரணத்தால் இரண்டு கைக்கடிகாரங்களை மும்பை சுங்கத்துறையினர்(mumbai Customs department) பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ஐந்து கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, கடந்தாண்டு ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் குர்னால் பாண்டியா தங்கம் மற்றும் பிற விலைமதிக்கத்தக்க பொருள்களை மறைத்து வைத்திருந்தாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: T20 WC: பீர் ஊற்ற வேண்டிய இடமாடா அது... ஆஸி., வீரர்கள் செய்த காரியம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.