ETV Bharat / sports

IPL 2022: பவுலிங்கை தேர்வு செய்த ஆர்சிபி!

author img

By

Published : Apr 5, 2022, 7:45 PM IST

IPL 2022
IPL 2022

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ்-ஐ வென்ற நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

மும்பை : ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பாஃப் டு ஃபிளசிஸ், “நாங்கள் பவுலிங்கை தேர்வு செய்கிறோம்.

ஏனெனில், இந்தப் பிட்ச் மிகவும் வித்தியாசமானது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்றார். தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், “டாஸ் வெல்லாதது ஏமாற்றம் அளிக்கவில்லை. பிட்ச் சற்று மாறுபட்டது போல் தெரிகிறது. இந்தப் பிட்சில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கவனம் செலுத்தி நாங்கள் வெல்ல முயற்சிப்போம்” என்றார்.

அணி வீரர்கள் விவரம்

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜாஸ் பட்லர், யாஷவி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நவ்தீப் சைனி, டிரென்ட் போல்ட், பிரபல கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாப் டு ஃபிளசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராத் கோலி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, வனிண்டோ ஹசரங்க, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முஹம்மது சிராஜ்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.