ETV Bharat / sports

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக சுனில் ஜோஷி நியமனம்!

author img

By

Published : Mar 4, 2020, 8:37 PM IST

bcci-names-sunil-joshi-as-new-chairman-of-selectors
bcci-names-sunil-joshi-as-new-chairman-of-selectors

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக முன்னாள் வீரர் சுனில் ஜோஷியை கிரிக்கெட் ஆலோசனைக் குழு நியமித்துள்ளது.

இந்திய ஆடவர் கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுவில் எம்எஸ்கே பிரசாத், ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய தேர்வுக் குழுவினருக்கான நேர்காணல் இன்று நடந்தது.

இதற்கான நேர்காணலை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினர் நடத்தினர். அதில் மொத்தம் வந்த 40 விண்ணப்பங்களில் சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங், வெங்கடேஷ் பிரசாத், ராஜேஷ் செளகான், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இறுதி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

அதில் முன்னாள் வீரர் சுனில் ஜோஷி தெற்கு மண்டல பிரதிநிதியாகவும், முன்னாள் வீரர் ஹர்விந்தர் சிங் மத்திய மண்டல பிரதிநிதியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் செயல்பாடுகள் சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு பிசிசிஐ, சிஏசி ஆகியோர் இணைந்து செயல்திறனை மதிப்பிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'சாம்பியன்கள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிட மாட்டார்கள்' - பி.வி. சிந்துவின் கதை...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.