ETV Bharat / sitara

எஸ்.பி.பி. உருவப்படத்திற்கு ஜெய்பூரில் அஞ்சலி செலுத்திய விஜய்சேதுபதி!

author img

By

Published : Sep 26, 2020, 5:05 PM IST

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

ஜெய்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய்சேதுபதி அங்கே எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (செப். 25) பிற்பகல் சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி.க்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாமல்போனது. அந்தவகையில் ஜெய்பூரில் படப்பிடிப்புக்காக சென்ற விஜய் சேதுபதியாலும் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.

அவர் ஜெய்பூரில் எஸ்.பி.பி. உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏத்திவைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் டாப்ஸி, ராதிகா, கோவை சரளா உள்ளிடோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை' - கே.ஜே. யேசுதாஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.