தமிழில் வெற்றிபெற்ற படங்கள் தற்போது அடுத்தடுத்த பாகமாக எடுக்கப்படுகின்றன. காஞ்சனா, சிங்கம், பில்லா, சண்டக்கோழி, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. தமிழ் சினிமாவில் ஹரார் ஜெனரில் வெளியான காஞ்சனா, அரண்மனை படங்களின் இரண்டாம் பாகம் நல்ல வசூலைக் கொடுத்தன.
2014ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் சுந்தர் சி, வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'அரண்மனை' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இரண்டு வருடங்களுக்குப் பின் சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் 'அரண்மனை 2' வெளியானது. இத்திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது.
இதனையடுத்து 'அரண்மனை 3' படத்தை இயக்க சுந்தர் சி இயக்கவுள்ளார். கதாநாயகனாக ஆர்யாவும் சுந்தர் சியும் நடிக்க உள்ளதாகவும் கதாநாயகியாக ராஷி கண்ணாவும், ஆண்ட்ரியாவும் நடிக்க உள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்காட் அரண்மனையில் தொடங்கியுள்ளது.
இதையும் வாசிங்க: முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்; கவனமாக இருங்கள் - ஆமீர்கான்