ETV Bharat / sitara

புதிய படப்பிடிப்புக்காக பழனி வந்த மம்முட்டி!

author img

By

Published : Nov 25, 2021, 5:01 PM IST

mammootty
mammootty

மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தின் படப்பிடிப்பிற்காக மம்முட்டி பழனிக்கு வந்துள்ளார்.

மலையாளத்தில் 'ஆமென்', 'அங்கமாலி டைரீஸ்', 'ஈ.மா.யூ.', 'ஜல்லிக்கட்டு' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் லிஜோ ஜோஸ் முக்கிய இடம் வகிக்கிறார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் கேரள திரையுலக வரலாற்றின் மிக முக்கியப் படங்களாக மாறியுள்ளன.

இவர் கடைசியாக இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளைக் குவித்தது. மேலும் இப்படம் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியாவின் சார்பாகத் தேர்வானது.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி செம்பன் வினோத்தை வைத்து 'சுருலி' என்னும் படத்தை இயக்கி முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து லிஜோ மம்முட்டியை வைத்து புதிய படத்தை இயக்கும் பணியைத் தொடங்கியுள்ளார்.

இப்படத்துக்கு 'நண்பகல் நேரத்து மயக்கம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பழனியில் தொடங்கப்பட்டுள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். மம்முட்டியே இப்படத்தைத் தயாரிக்கிறார். மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

பிடிப்புக்காக பழனி வந்த மம்முட்டி

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மம்முட்டி பழனிக்கு வந்துள்ளார். அப்போது அவர் கேரா வேனிலிருந்து இறங்கி காரில் ஏறுவதை அங்கிருந்த சிலர் காணொலியாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

இதுவரை தனது படங்களில் புதுமுகங்களை வைத்து இயக்கிவந்து லிஜோ, முதன் முறையாக பெரிய நடிகரான மம்முட்டியை வைத்து இயக்கவுள்ளார். இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: நெடுமுடி வேணு குறித்து நினைவோடையை பகிர்ந்த மம்முட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.