ETV Bharat / international

உணவு பாதுகாப்பின்றி தவிக்கும் ஒரு கோடி ஆப்கானிஸ்தான் மக்கள்!

author img

By

Published : Aug 20, 2021, 2:23 PM IST

UN Office
UN Office

போர் சூழலில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தானில் சுமார் 1.22 கோடி பேர் உணவுப் பாதுகாப்பில்லாமல் தவிப்பதாக ஐநா ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பின் சார்பில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு மக்களின் உணவு பாதுகாப்பு மிகவும் மோசமான சூழலுக்கு உள்ளாகியிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வறிக்கையின்படி, தற்போதைய சூழலில் சுமார் ஒரு கோடியே 22 லட்சம் நபர்கள் உணவு பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது. மேலும், ”நாட்டின் ஊட்டச்சத்துக் குறைபாடு 16 விழுக்காடு உயர்ந்து, சுமார் ஒன்பது லட்சம் பேர் ஊட்டசத்து குறைபாட்டில் உள்ளனர்.

அங்கு நிலவும் போர் சூழல் காரணமாக வேளாண் நடவடிக்கைகள் 28 விழுக்காடு குறைந்துள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களான கோதுமை, அரசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகிவற்றின் விலை 50 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அத்துடன் போர் சூழல் காரணமாக கடந்த எட்டு மாதத்தில் ஐந்தரை லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடத்திலிருந்து வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்” என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: ஆப்கனைவிட்டு வெளியேற 6,000 பேர் காத்திருப்பு - அமெரிக்கா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.