ETV Bharat / international

நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்ட முதல் தனியார் விண்கலம்

author img

By

Published : Nov 16, 2020, 10:05 AM IST

ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்கலம்
ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்கலம்

அமெரிக்கா: நாசாவுடன் இணைந்து தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எஸ்க் தயாரித்துள்ள ட்ராகன் விண்கலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக,விண்ணில் செலுத்தப்பட்டது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் இருந்து விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்புவது வழக்கான ஒன்று. இம்முறை அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் தயாரித்த டிராகன் எனும் விண்கலம் மூலம் முதன்முறையாக நாசாவின் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நாசா-ஸ்பேஸ் எக்ஸ் இடையிலான முதல் வர்த்தக ரீதியலான இந்த தனியார் விண்கலத்தின் சோதனை ஓட்டம் 3 மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கடந்த சனிக்கிழமை (நவம்பர் 14) முதற்கட்டமாக நான்கு விண்வெளி வீரர்களுடன் டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக, அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து அமெரிக்காவைச் சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள், ஜப்பானிய வீரர் ஒருவர் உட்பட 4 வீரர்களை ஏந்தியவாறு டிராகன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க:

மோசமான வானிலை... ஒத்திவைக்கப்பட்ட நாசாவின் திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.