ETV Bharat / international

ராக்கெட் ஏவுதல் திட்டத்தை தள்ளி வைத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

author img

By

Published : Nov 23, 2020, 6:42 PM IST

SpaceX
SpaceX

மோசமான வானிலை காரணமாக புதிய ராக்கெட் ஏவும் திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தள்ளிவைத்துள்ளது.

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 என்ற புதிய ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்தது. இந்த ராக்கெட் மூலம் 60 செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாராகிவந்தது.

தொழில்நுட்ப ரீதியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டது ராக்கெட் விண்ணில் ஏவுவது தயாராக இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக ராக்கெட் விண்ணில் செலுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தை தற்போது தள்ளி வைத்துள்ளது.

ஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. இந்த புதிய செயற்கை கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிறுத்தும் பட்சத்தில் ஏற்கனவே இருந்த செயற்கைக் கோள்களுடன் இணைந்து வெற்றிகரமாக செயல்படும்.

இதுவரை மொத்தம் 830 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இவற்றில் கணிசமானவை தற்போது செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.