ETV Bharat / elections

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெறும்- காதர்முகைதீன்

author img

By

Published : Apr 5, 2019, 10:55 PM IST

காதர்முகைதீன்

திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைக்கும் என இந்திய யூனியன் முஸ்லீம் கட்சித்தலைவர் காதர்முகைதீன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைக்கும். மக்கள் அனைவரும் மோடி மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிராக திரும்பியுள்ளனர் எனக் கூறினார்.

காதர்முகைதீன் செய்தியாளர்கள் சந்திப்பு

இதனிடையே திமுக பொருளாளர் வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றபட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், பணம் பறிமுதல் என்பது அனைத்து கட்சியிலும் நடைபெறுகிறது. ஆனால் திமுக கட்சியை மட்டுமே ஊடகங்கள் பிரதானப்படுத்திக் காட்டுகின்றன எனத் தெரிவித்தார்.

Intro:தென்காசியில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் முகைதீன் செய்தியாளர்களை சந்தித்தார்


Body:நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் திரு காதர்முகைதீன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது மத்தியில் காங்கிரஸ் அபார வெற்றி பெறும் என்றும் மக்கள் அனைவரும் மோடிக்கு எதிராகவும் அதிமுக கூட்டணிக்கு எதிராக திரும்பியுள்ளனர் என்றும் தெரிவித்தார் .மேலும் பணவீக்கம் காரணமாக இந்திய மக்கள் அனைவரும் மோடி அரசின் மீது மிகுந்த அதிருப்தி உள்ளதாகவும் ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் கண்டிப்பாக ஒரு சிறந்த அரசு அமையும் என்றும் தெரிவித்தார். திமுக கட்சிக்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு இது அனைத்து கட்சிகளிலும் நடந்து வருகிறது ஆனால் தொலைக்காட்சி மற்றும் ஊடக நிறுவனங்கள் திமுக கட்சிகள் மட்டுமே பிரதானப்படுத்தி காண்பிப்பதாகவும் அதிமுக மற்றும் இதர கட்சிகளே செய்தி கூட போடவில்லை என்றும் தெரிவித்தார். உடன் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.