ETV Bharat / elections

வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்கும் பணி: பொதுப் பார்வையாளர்கள் ஆய்வு

author img

By

Published : Mar 23, 2021, 7:57 PM IST

தேர்தல் பறக்கும்படை
தேர்தல் பறக்கும்படை

தேர்தல் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்கும் பணியைப் பொதுப் பார்வையாளர்கள் ஆர்.கே. தினேஷ் சிங், கமால் ஜஹான் லக்ரா பங்கஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் மாவட்டத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேர்தல் சம்பந்தமான புகார்களைக் கண்காணிக்க 24 மணி நேரமும் அலுவலர்கள் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றனர்.

மேலும், தருமபுரி மாவட்டத்தில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள், காணொலி கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டுத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.

வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி

இதன்படி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் பறக்கும் படை, நிலையான குழுக்கள், காணொலி கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 95 குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனிடையே பறக்கும் படை, நிலையான கண்காணிப்புப் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனம் எந்த இடத்தில் செல்கிறது என்பதைத் தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கணினியின் உதவியுடன் கண்காணிக்கவும் வாகனத்தின் வேகத்தை கண்காணிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பணியினை தருமபுரி மாவட்ட ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஆர்.கே. தினேஷ் சிங் கமால் ஜஹான் லக்ரா, பங்கஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

மேலும், சிவிஜில் செயலியில் பணப்பட்டுவாடா, பரிசு விநியோகம், மதுபான விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் குறித்து வரப்பெற்ற புகார்கள் குறித்தும் ஆய்வுசெய்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. கார்த்திகா, மாவட்ட வருவாய் அலுவலர் க. இராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: பாலக்கோட்டில் ஸ்டாலின் பரப்புரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.