ETV Bharat / city

திமுகவினருக்கு மட்டும் பொங்கல் தொகுப்பு வழங்கியதாக ரேஷன் கடை முற்றுகை!

author img

By

Published : Jan 17, 2022, 10:45 PM IST

கோனேரிக்குப்பம் நியாய விலைக்கடை முன் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், திமுகவினருக்கு மட்டுமே பொருட்கள் தருவதாகக்கூறி, முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரேஷன் கடை முற்றுகை
ரேஷன் கடை முற்றுகை

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த கோனேரிக்குப்பம் நியாய விலைக்கடையில் கோனேரிக்குப்பம், ஒட்டப்பட்டி, சின்ன குட்டூர் என்னும் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 550-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், பொருட்கள் பெற்று வருகின்றனர்.

முறையற்ற அறிவிப்பும் முறைகேடும்

இந்த நிலையில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை இன்று கோனேரிக்குப்பம் நியாய விலைக்கடையில், வழங்குவதாக சேல்ஸ்மேன் பரிமளா கூறி இருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சுமார் காலை 6 மணி முதலே நியாய விலைக் கடை முன் அமர்ந்திருந்தனர்.

நியாயவிலைக் கடை முற்றுகை

ரேஷன் கடை முற்றுகை

இந்த நிலையில் உள்ளூர்ப் பகுதியைச்சேர்ந்த திமுக நிர்வாகி ஜெய்சங்கரின் பெயரைப்பயன்படுத்தி, திமுகவைச் சேர்ந்த முப்பத்து மூன்று குடும்பத்தாருக்கு மட்டும் இருபத்து ஒரு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்கிவிட்டு, நியாய விலைக் கடையைப் பூட்டி சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நியாய விலைக் கடை முற்றுகையிட்டனர். இதனால் சில மணி நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: வடசென்னையில் 15 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.