ETV Bharat / city

திருமணத்தை மீறிய உறவு - கணவரை கொலை செய்த மனைவி உள்பட 2 பேர் கைது

author img

By

Published : Aug 4, 2021, 9:41 PM IST

கணவரை கொலை செய்த மனைவி
கணவரை கொலை செய்த மனைவி

சேலத்தில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூராக இருந்த கணவரைக் கொலை செய்த மனைவி அவரது ஆண் நண்பர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சேலம்: அம்மாபேட்டை மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (39). இவர், வாழையிலை கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ஷாலினி (22). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

ஷாலினி கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆண் நண்பர்களுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை கணவர் பலமுறை கண்டித்தும் கேட்காததால் மனைவிடம் இருந்த செல்போனை கணவர் பறித்துக் கொண்டுள்ளார்.

இருப்பினும் கணவருக்குத் தெரியாமல் அடிக்கடி ஆண் நண்பர்களுடன் செல்போனில் ரகசியமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில் ஷாலினி கூச்சலிட்டவாறு வீட்டின் வெளியே வந்துள்ளார்.

சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்த கணவர்

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அவரிடம் விசாரித்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீட்டினுள் நுழைந்து தனது நகையை பறித்துக்கொண்டு, தனது கணவரை கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பிரபு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகலவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பிரபுவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட பிரபு
கொலை செய்யப்பட்ட பிரபு

ஆனால், பிரபு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் துளசி அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஷாலினியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அம்பலமான உன்மை

விசாரணையில், முகநூல் மூலம் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த அப்பு (எ) கனகராஜுடன் (23) ஷாலினி நெருங்கிப் பழகி வந்தது தெரியவந்தது. கணவருடன் வாழ பிடிக்காமல், ஆண் நண்பர் கனகராஜுடன் சேர்ந்து வாழ ஷாலினி விரும்பியதால், கணவரை கொலை செய்ய திட்டமிட்டு, துறையூரில் இருந்து கனகராஜை வரவழைத்து வீட்டு மொட்டை மாடியில் மறைத்து வைத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட கனகராஜ்
கைது செய்யப்பட்ட கனகராஜ்

கணவர் பிரபு இரவு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தூங்கியதும் ஷாலினி, அவரது ஆண் நண்பர் கனகராஜும் சேர்ந்து மிளகாய் பொடியை தூவி துண்டை வைத்து வாய், மூக்கு பகுதியை அழுத்தி மூச்சுதிணறல் ஏற்படுத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஷாலினி, கனகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு - ஒருவர் கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.