ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவு - ஒருவர் கொலை

author img

By

Published : Aug 4, 2021, 5:11 PM IST

திருப்பத்தூரில் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருமணத்தை மீறிய உறவு
திருமணத்தை மீறிய உறவு

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சலவை தொழிலாளி டில்லிபாபு (35). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் டில்லி பாபுவின் மனைவி லட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது.

இது குறித்து டில்லிபாபு, லட்சுமியை பலமுறை கண்டித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் காரணமாக தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், லட்சுமி தனது கணவர் டில்லிபாபுவை பிரிந்து கடந்த ஆறு மாதங்களாக அவரது தாய் வீட்டில் தங்கியுள்ளார்.

இவ்வளவு பிரச்னை நடந்த பிறகும் லட்சுமி, கோவிந்தசாமியுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த டில்லிபாபு நேற்று (ஆகஸ்ட் 03) கோவிந்தசாமியின் வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

காவல் துறை விசாரணை

கோவிந்தசாமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய டில்லிபாபுவை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், டில்லிபாபு ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சரணடைந்த டில்லி பாபு
சரணடைந்த டில்லி பாபு

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உமராபாத் காவல் துறையினர் கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணம் மீறிய உறவு - 12 ஆண்டுகள் காத்திருந்து பலி தீர்த்த இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.