ETV Bharat / city

திருமணத்தை மீறிய உறவு - கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது

author img

By

Published : Sep 29, 2021, 9:52 AM IST

கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது
கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது

சேலத்தில் திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட தகராறில் கணவரை கத்தியால் குத்திய மனைவியை காவல் துறையினர் கைது செய்தனர்.

சேலம்: எடப்பாடி அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரது மகன் பாலமுருகன் (32). இவரது மனைவி இலக்கியா (26). இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செப்.26ஆம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இலக்கியா கத்தியால் பாலமுருகனை குத்தியுள்ளார். தடுக்கச் சென்ற பாலமுருகனின் தாயார் ஜோதியையும் அவர் தாக்கியுள்ளார்.

சிகிச்சை

இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாலமுருகன், ஜோதியை மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கைது - சிறை

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த எடப்பாடி காவல் துறையினர், இலக்கியாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இலக்கியாவுக்கு அவரது கல்லூரி நண்பருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்தது.

இதனையறிந்த பாலமுருகன், அவருடனான நட்பை துண்டித்துக் கொள்ளுமாறு இலக்கியாவை வற்புறுத்தி வந்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறின்போது பாலமுருகனுக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது. இதையடுத்து இலக்கியாவை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு - கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.