ETV Bharat / city

நீட் தேர்வு முறைகேட்டுக்கு உதவிய ரஷீத்தின் ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு

author img

By

Published : Jun 15, 2021, 9:01 PM IST

நீட் தேர்வு முறைகேட்டுக்கு உதவிய ரஷீத்தின் ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு
நீட் தேர்வு முறைகேட்டுக்கு உதவிய ரஷீத்தின் ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு

மதுரை: நீட் தேர்வில் முறைகேடு செய்ததற்கு உதவியது, இடைத்தரகராக செயல்பட்டதாக கூறி கைதுசெய்யப்பட்ட ரஷீத் ஜாமின் மனுவின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த ரஷீத் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், " நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

இந்த வழக்கில் எனது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் உறுதியாக ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன். தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன். ஆகவே ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் இது போன்ற மேலும் சில வழக்குகள் நீதிபதி முன் விசாரணைக்கு இருப்பதால் இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:ராஜபாளையம்-மதுரை சாலையில் லாரி கடத்திய 3 நபர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.