ETV Bharat / city

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பள்ளி கட்டடம்: புதிய குழு அமைத்து ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Oct 28, 2021, 10:11 PM IST

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பள்ளி கட்டடம்
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பள்ளி கட்டடம்

ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளத்தில் அதிமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியின் கட்டட கட்டுமான பணி குறித்து புதிய நிபுணர் குழு அமைத்து, ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே தினைக்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சில ஆண்டுக்கு முன் ரூ.1.20 கோடி செலவில் மூன்று மாடி வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.

தரமின்றி கட்டப்பட்டதால், புதிய கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வகுப்பறைக்குள் மாணவர்கள் அமர வைக்கப்படவில்லை. இது குறித்து செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து பொதுநல மனுவாக (2018இல்) விசாரித்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆஜராகி, கட்டட விரிசல் ஏற்பட்ட பகுதியில் பூச்சு பணிகள் நடந்துள்ளன. இது போதுமானதல்ல. புதிய கட்டடத்தோடு கட்டப்பட்ட கழிப்பறை மோசமான நிலையில் உள்ளது என்றார்.

அப்போது கூடுதல் வழக்கறிஞர் வீராகதிரவன் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட பள்ளி கட்டட குறைபாடுகள் சரி செய்யப்பட்டன. ஐஐடி மற்றும் பொதுப்பணித்துறை நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து, பள்ளி கட்டடத்தின் உறுதி தன்மையில் திருப்தி தெரிவித்துள்ளனர் என்றார்.

இதையடுத்து, அரசு தரப்பில் மற்றொரு நிபுணர் குழு அமைத்து, ஆய்வு செய்து அறிக்கையளிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணையில் அத்துமீறி நுழைந்த கேரள அமைச்சர்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.