ETV Bharat / city

தொடர் திருட்டு: குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

author img

By

Published : Jan 19, 2022, 6:34 AM IST

கைது
கைது

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் திருட்டு வழகில் கைதாகி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்கிற ராஜா மீதி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: கடந்த வருடம் டிசம்பர் மாதம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் அங்கிருந்த பெண்ணிடமிருந்து ரூ.5,000 திருடு போனது. .

கைது

இதுதொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்த காவல்துறையினர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கரூர் மாவட்டம் பெருச்சிபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (எ) ராஜா என்பவரை கைது செய்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கு குறித்து ஆறுமுகம் (எ) ராஜாவிடம் விசாரணை மேற்கொண்ட போது இவர் கரூர், பசுவபட்டி, வெங்கமேடு, அவிநாசி, கோவை, பெருந்துறை, சக்தி, மற்றும் கோபி ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 41 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்

குண்டர் சட்டம் பாய்ந்தது

இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார் பின்னர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் பரிந்துரையின் பேரில், திருட்டு வழக்கில் ஏற்கனவே கைதாகி கோவை மத்தியச் சிறையில் இருந்த ஆறுமுகம் (எ) ராஜாவைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ராஜா மீது காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: செம்மண் கடத்தலில் திமுக பிரமுகர் - நடவடிக்கை எடுக்க விவசாயி கோரிக்கை!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.