பவானிசாகர் அணையில் 25,000 கன அடி நீர் திறப்பு; ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம்

author img

By

Published : Aug 6, 2022, 3:40 PM IST

பவானி ஆற்றில் வெள்ளம்

ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை, காளிங்கராயன் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழந்தது.

ஈரோடு: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையால், அணை வேகமாக நிரம்புவதைத் தொடர்ந்து நேற்று (ஆக.6) வினாடிக்கு 25 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பவானி ஆற்றங்கரையில் உள்ள சவுண்டப்பூர், அத்தாணி, காமராஜபுரம், கருவல்வாடிப் புதூர், கீல்வாணி, மூங்கில் பட்டி, கூத்தம்பூண்டி, ஆப்பக்கூடல், புதூர், தளவாய் பேட்டை, பவானி பழைய பேருந்து நிலையம் பகுதி வரை வெள்ளநீரானது கரையின் இருபுறங்களிலும் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனைத்தொடர்ந்து இப்பகுதியில் உள்ள கோயில்கள், வீடுகளை சூழ்ந்து தற்போது தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

மேலும் குப்பாண்டம்பாளையம், மேவாணி கூத்தம்பூண்டி ஊராட்சி சார்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 25 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் இன்னும் தளவாய்பேட்டை பவானி பஸ் நிலையம் பகுதிகளுக்கு சென்று சேரவில்லை.

பவானி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

பவானி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கும் பட்சத்தில் குடியிருப்புகள் கோயில்கள் மூழ்கும் நிலை ஏற்படும். காவிரி கரையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்த பவானி மீண்டும் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிப்படையும் நிலை உள்ளது.

இந்நிலையில் பவானி காளிங்கராயன் அணை பகுதியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த வெள்ள நீருடன் ஆற்றில் அடித்துவரபட்ட ஆகாய தாமரை காளிங்கராயன் ஆற்றுப்பாலத்தில் தேங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீர் சூழ்ந்து காணப்படும் கொள்ளிடம்...! படகு மூலம் மக்கள் மீட்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.