ETV Bharat / city

குரூப் 4 தேர்வு: பாஸ் என்ற பாஸ்கரன் பட காமெடி போன்ற சம்பவம்

author img

By

Published : Jul 24, 2022, 7:40 PM IST

குழந்தையை பார்த்துக் கொண்ட கணவர்
குழந்தையை பார்த்துக் கொண்ட கணவர்

கோவையில் குரூப் 4 தேர்வு எழுத மனைவி சென்றதால் மையத்திற்கு வெளியே அவரது கணவர் குழந்தையை பார்த்துக் கொண்டார்.

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் கோவை மாவட்டத்தில் 247 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்த நிலையில் கோவையில் உள்ள தேர்வு மையங்களில் ஏராளமான பெண்கள் தேர்வெழுதினர்.

அதில் சிலர் பாலூட்டும் கை குழந்தைகளுடன் தேர்வெழுத வந்திருந்தனர். நீலம்பூரில் உள்ள கேபிஆர் கல்வி நிறுவனத்தில் நிறுவப்பட்ட தேர்வு மையங்களுக்கு தாய்மார்கள் தேர்வெழுத சென்ற நிலையில், தந்தைகள் குழந்தைகளை பார்த்துக்கொண்டனர்.

குழந்தையை பார்த்துக் கொண்ட கணவர்

அப்போது திருப்பதி என்பவர் குழந்தையை தொட்டிலில் போட்டு பார்த்துக்கொண்டார். திருப்பதியின் மனைவி மகேஷ்வரி வரும் வரை திருப்பதி கை குழந்தையை தாய் போல பார்த்துக்கொண்டார்.

இது அங்கு வந்திருந்த பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதே போன்று பல தந்தைகள் தங்களின் குழந்தைகளை கனிவுடன் பார்த்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.