ETV Bharat / city

பொள்ளாச்சி கொடூரம்: திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டம் ரத்து

author img

By

Published : Nov 1, 2019, 6:10 PM IST

Pollachi case

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் சிலர் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். இந்த நிலையில் வழக்கின் தீவிரம் கருதி அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருநாவுக்கரசுவின் தாய் லதா மற்றும் சபரிராஜனின் தாய் பரிமளா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். அதில், குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பித்த உத்தரவில் விதிமுறைகளை அரசு முறையாகப் பின்பற்றவில்லை என்றும் பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ்தான் விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறபித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை. இதனால் இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் பற்றும் டீகா ராமன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. ஆவணங்களும் தெளிவில்லாமல் உள்ளது என்று கூறி அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் கருவை கலைக்க உத்தரவு!

Intro:Body:பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருநாவுக்கரசுவின் தாய் லதா மற்றும் சபரிராஜனின் தாய் பரிமளா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்தனர்.

அதில், பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்ட பிரிவின் கீழ் பதிவு செய்து விசாரிக்கவில்லை. சரியான ஆவணங்களை குடும்பத்தினருக்கும் வழங்கப்படவில்லை. அதனால், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் பற்றும் டீகா ராமன் அமர்வு, முறையாக வழக்கு பதிவு செய்யவில்லை என தெரிவித்து இருவர் மீதும் கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.