ETV Bharat / city

கோவையில் பிடிபட்ட 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு!

author img

By

Published : Sep 14, 2020, 12:01 AM IST

8 Feet Python Caught In Coimbatore
8 Feet Python Caught In Coimbatore

கோவை: தோட்டத்திலிருந்து 8 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

கோவை மாவட்டம், ஆனைகட்டி அருகே துவைப்பதி எனும் கிராமத்தில் உள்ள மருதகுட்டி என்பவரது தோட்டத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.

இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து, அங்குச் சென்ற வன பாதுகாப்பாளர்கள் ஒரு மணி நேரம் போராடி அந்த 8 அடி நீள மலைப்பாம்பை பிடித்து மாங்கரை வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்.

குழந்தைகள், பெரியவர்கள் தோட்ட வேலையாட்கள் வரும் இடத்தில் இவ்வளவு நீள பாம்பு வந்தது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.