ETV Bharat / city

பெண் கருத்தடை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த விவகாரம்:தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்தாரா..?

author img

By

Published : Jun 5, 2022, 4:26 PM IST

பெண் கருத்தடை சிகிச்சைக்கு பின் உயிரிழந்த விவகாரம்
பெண் கருத்தடை சிகிச்சைக்கு பின் உயிரிழந்த விவகாரம்

பெண் கருத்தடை சிகிச்சைக்கு பின் உயிரிழந்த விவகாரம், அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்தாரா என கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கம் அருகே சின்னபோரூர் அரசு மருத்துவமனையில் போரூரைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பவரின் மனைவி வினோதினி கடந்த திங்கட்கிழமை கருத்தடை ஆபரேஷன் செய்துள்ளார். இந்த நிலையில் தீராத வயிற்றுவலி அவருக்கு இருந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் அவர் நேற்று(ஜூன்.04) மதியம் 2 மணி அளவில் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்த வினோதினியின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என சுமார் 30 பேர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தனது மனைவியின் மரணத்துக்கு காரணமாக இருந்த சின்னபோரூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வினோதினியின் கணவர் சதீஷ்குமார் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். கணவன் கொடுத்தப்புகாரின் அடிப்படையில் 174 சட்டப்பிரிவின்கீழ் சந்தேக மரணம் என கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் வினோதினியின் உடல், உடற்கூராய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்த உடற்கூராய்வு அறிக்கை மருத்துவ வாரியத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மருத்துவ வாரியத்தில் இணை இயக்குநர் தலைமையில் மருத்துவக்குழு விசாரணை நடத்த உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இணை இயக்குநர் அறிக்கையின் அடிப்படையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் வினோதினி பலியானதாக அறிக்கை கொடுக்கப்பட்டால், வழக்கில் அதற்கேற்றார் போல் சட்டப்பிரிவுகள் மாற்றப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கணவர் படுகொலை - மன உளைச்சலில் மனைவி தற்கொலை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.