ETV Bharat / city

வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவல்துறையினர் காந்திக்கு அஞ்சலி

author img

By

Published : Jan 30, 2022, 4:38 PM IST

போக்குவரத்து காவல்துறையினர் காந்திக்கு அஞ்சலி
போக்குவரத்து காவல்துறையினர் காந்திக்கு அஞ்சலி

சென்னையில் பல்வேறு சாலைகளில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவல்துறையினர் இரண்டு நிமிடம் அண்ணல் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சென்னை: மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் அண்ணல் காந்தியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று(ஜன.30) சென்னையில் பல்வேறு முக்கிய சாலை சந்திப்புகளில் இரண்டு நிமிடம் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவல்துறையினர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

போக்குவரத்து காவல்துறையினர் அண்ணல் காந்திக்கு அஞ்சலி

போக்குவரத்து காவல்துறை அந்த இடங்களில் சிக்னல்களை அணைத்து விட்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் வாகன ஓட்டிகள் கவனமாகவும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்தும் வாகனத்தை ஓட்ட வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

இதையும் படிங்க: ஆனைமலை புலிகள் காப்பகம்: பாகனை கொன்ற யானை கரேலில் அடைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.