ETV Bharat / city

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இதுவே தருணம் - வைரமுத்து!

author img

By

Published : Jan 15, 2021, 12:09 PM IST

திருக்குறளை தேசிய நூலாக்க இதுவே தக்க தருணம் - வைரமுத்து!
திருக்குறளை தேசிய நூலாக்க இதுவே தக்க தருணம் - வைரமுத்து!

சென்னை: தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க இதுவே தக்க தருணம் என்று பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

தை 2ஆம் நாளான இன்று (ஜன. 15) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இதற்கு வாழ்த்து தெரிவித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க இதுவே தக்க தருணம் என்று பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து ட்விட்
கவிஞர் வைரமுத்து ட்விட்

அதில், இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்னும் பிரதமர் மோடியின் சுட்டுரையை வரவேற்கிறோம் எனவும் தேசிய நூலாகத் திருக்குறளை அறிவிக்க இதுவே தக்க தருணம் என்றும் தெரிவிக்கிறோம் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...'இந்திய இளைஞர்கள் அனைவரும் திருக்குறள் படிக்க வேண்டும்' - வள்ளுவரை வணங்கி பிரதமர் மோடி ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.