ETV Bharat / city

1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

author img

By

Published : Sep 30, 2021, 6:13 PM IST

Updated : Sep 30, 2021, 9:28 PM IST

mk stalin
mk stalin

தமிழ்நாட்டில் அடுத்த கட்டமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறக்கப்பட உள்ள நிலையில், வீடு தேடி பள்ளிகள் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த கட்டமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை: நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுவருகின்றன. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் மாணவர்கள் பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. இதனிடையே 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (செப்.28) ஆலோசனை மேற்கொண்டார்.இதில் சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ’வீடு தேடி பள்ளிகள்’ என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வீடுகளுக்கே சென்று பாடம் எடுக்க உள்ளனர். இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நவம்பரில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

Last Updated :Sep 30, 2021, 9:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.