ETV Bharat / city

இந்த முறையாவது குற்றவாளிகளுக்கு வாக்களிக்காதீர்கள்- கமல்ஹாசன்

author img

By

Published : Apr 16, 2019, 7:56 PM IST

Kamalhassan election campaign in chennai

சென்னை: சிறைக்கு சென்றவர்கள், செல்லவுள்ளவர்கள், சிறை சென்று வந்தவர்களுக்குதான் நீங்கள் வாக்களிக்கிறீர்கள், அதனால் இந்த முறை சிந்தித்து வாக்களியுங்கள் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, பூவிருந்தவல்லி மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் மநீம வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டை கொள்ளைப்புறமாக மாற்ற முயற்சி செய்கின்றனர். ஆனால் இந்தியாவின் தலைநகராக தமிழகம் மாறும். இந்த சிறுக்கூட்டத்தை அடக்கி விடலாம் என வெள்ளையர்களை போல கொள்ளையர்களும் நினைக்கிறார்கள் என கூறினார்.

இப்போதாவது சிந்தித்து வாக்களியுங்கள் -கமல்ஹாசன் அறிவுரை!

ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்கள் டெல்லியிலும் இருக்கிறார்கள். இன்று தண்ணீரை விற்பவர்கள் நாளை காற்றையும் விற்பார்கள் என கடுமையாக கமல்ஹாசன் விமர்சித்தார்.

சிறைக்கு சென்றவர்கள் , செல்லவுள்ளவர்கள், சிறை சென்று வந்தவர்களுக்கு தான் நீங்கள் வாக்களிக்கிறீர்கள். எனவே இந்த முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்...கமல்ஹாசன்

சென்னை மெரினா  கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே தென் சென்னை,மத்திய சென்னை ,
வட சென்னை ,பூவிருந்தவல்லி பாராளுமன்றம் மற்றும் இத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை  ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டார் இப்போது பேசிய அவர்.

இந்த தேர்தலில் களத்தில் இருங்க தைரியம் இருக்கிறாதா என கேள்வி கேட்டவர்கள் தான் எனக்கு தைரியம் அளித்தார்கள்

தமிழகத்தை கொள்ளைப்புறமாக மாற்ற முயற்சி செய்கின்றனர்
ஆனால் இந்தியாவின் தலைநகராக தமிழகம் மாறும்

இந்த சிறுக்கூட்டத்தை அடக்கி விடலாம் என வெள்ளையர்களை போல கொள்ளையர்களும் நினைக்கிறார்கள்

ஜல்லிக்கட்டை போரட்டத்தை கொச்சைப்படுத்தியவர்கள் டெல்லியிலும் இருக்கிறார்கள் கோட்டையிலும் இருக்கிறார்கள்
மெரின கடற்கரை போரட்டக்களத்தின் சின்னம்
ஒரு சிறிய இடத்தில் துவங்கிய நம்பிக்கை இங்கு வந்து நிற்கிறது

இன்று தண்ணீரை விற்பவர்கள் நாளை காற்றையும் விற்பார்கள்
தற்போது தமிழகத்தில் மும்முனை தாக்குதல் இருக்கிறது. தமிழகமும் சாக்கடையாக இருக்கிறது. 
அதில் புழுக்களாக நாம் இருக்கக்கூடாது.

மக்கள் ஊருக்குள் விட மாட்டார்கள் என்பதால் தான் கஜா புயலின் போது முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஹெலிகாப்டரில் சென்றனர். கூவத்தூரில் தொடங்கிய சாக்கடை அரசியல் நீரோட்டத்தில் கலக்கக்கூடாது.
தமிழகத்தை கொல்லை புறமாக மாற்ற நடக்கும் முயற்சியினை தடுத்து நிறுத்த வேண்டும்
பா.ஜ.க வும் ஆர்.எஸ்.எஸ் ம் நாட்டை துண்டாட முயல்கின்றனர் பிரச்சாரம் முடிய இன்னும் 10 நிமிடங்கள் தான் இருக்கிறது என கூறுகின்றனர். புரட்சி செய்ய 3 நிமிடங்கள் போதும் இன்று பேசினார்.


பிராசாரத்திற்கு பின்னர் கலங்கரை விளக்கம் முதல் காந்தி சிலை வரை ஊர்வலமாக சென்ற கமல்ஹாசன். மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் ஊழல் செய்வது உறுதியானால் அவர்கள் ராஜினாமா செய்வார்கள் அதற்கான 20 ரூபாய் 20 ரூபாய் ஸ்டாம்பு பத்திரத்தில்  வேட்பாளர்கள்  வரும் காலங்களில் தாங்கள் தவறு செய்தால் தங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் என்று எழுதி கையெழுத்து போட்டு காந்தி சிலையின் முன் கமலஹாசனிடம் வேட்பாளர்கள் ஒப்படைத்தனர்.





 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.