சென்னை: நில அபகரிப்பு வழக்கில் வாரந்தோறும் காவல்துறை முன்பு ஆஜராக வேண்டுமென்று ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த நிபந்தனை ஜாமின் உத்தரவில், இரு வாரங்களுக்கு திருச்சியில் தங்கியிருந்து, கண்டோன்மெண்ட் போலீசில் கையெழுத்திட வேண்டும் என்றும், அதன் பின்னர் திங்கள்கிழமைதோறும் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜாமினில் வெளிவந்த ஜெயக்குமார் வாரந்தோறும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி வருகிறார். இதற்கிடையில் திங்கள்கிழமை தோறும் கையெழுதிட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு வரும் திங்கள்கிழமை (ஏப்.25) விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க:தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்த தனி நீதிபதியின் உத்தரவு - உறுதி செய்தது உயர் நீதிமன்றம்