ETV Bharat / city

சென்னை விமான நிலையத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

author img

By

Published : Jan 8, 2020, 10:04 AM IST

Gold smuggling
Gold smuggling

சென்னை: கொழும்பு, சார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு பெரிய அளவிலான கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

அப்போது கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த அசாப் அலிகான்(51),
முகமது ரம்சின்(51), ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் (21), கலந்தர் அப்பாஸ்(36), தாஜுல்மின்(41) மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த நாகூர் கனி(23) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறையினர் விசாரித்தனர்.

அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் அவர்களின் உடமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். பின்னர் சுங்கத் துறையினர் அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று முழுவதுமாக சோதித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

அப்போது, அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. ஆறு பேரிடமிருந்து மொத்தம் ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பிலான 2 கிலோ 650 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: குமரியில் ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக படகு தளம் அமைக்க முடிவு

Intro:கொழும்பு, சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ. 1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 650 கிராம் தங்கம் பறிமுதல்Body:கொழும்பு, சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ. 1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 650 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த அசாப் அலிகான்(51),
முகமது ரம்சின்(51), ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அசாருதீன் (21), கலந்தர் அப்பாஸ்(36), தாஜுல்மின்(41) மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த நாகூர் கனி(23) ஆகியோர் வந்தனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தபோது எதுவுமில்லை. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 6 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 650 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். யாருக்காக கடத்தி வந்தனர், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.