ETV Bharat / city

இயக்குநர் மணிரத்னத்திற்கு கரோனா - மருத்துவமனையில் அனுமதி...

author img

By

Published : Jul 19, 2022, 9:07 AM IST

Updated : Jul 19, 2022, 3:11 PM IST

இயக்குனர் மணிரத்னத்திற்கு கரோனா
இயக்குனர் மணிரத்னத்திற்கு கரோனா

இயக்குநர் மணிரத்னத்திற்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் பிரம்மாண்டமாக 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இயக்குநர் மணிரத்னத்திற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக, தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது..

இதையும் படிங்க: விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலை’ திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம்

Last Updated :Jul 19, 2022, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.