ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும்  40 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : May 10, 2022, 10:51 PM IST

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் மேலும் 40 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் மே 10ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், ’தமிழ்நாட்டின் மேலும் புதிதாக 12 ஆயிரத்து 213 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 40 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு இருப்பது கண்டறியப் பட்டன.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 51 லட்சத்து 48 ஆயிரத்து 489 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம் 34 லட்சத்து 54 ஆயிரத்து 431 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 441 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 53 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 965 என உயர்ந்துள்ளது. சென்னையில் புதிதாக 23 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 6 நபர்களுக்கும், கோயம்புத்தூர், திருவள்ளூரில் தலா 2 நபர்களுக்கும், திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்கள் என 40 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படிங்க: முண்டாசு கவிஞரின் பேத்தி முதலமைச்சருக்கு கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.