ETV Bharat / city

அதிமுக தலைமை அலுவலகத்தின் சீலை அகற்றக் கோரி அவசர மனு

author img

By

Published : Jul 12, 2022, 12:39 PM IST

Updated : Jul 12, 2022, 5:28 PM IST

அவசர மனு
அவசர மனு

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் முன் நேற்று (ஜூலை 11), ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

இந்நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை, அகற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக இன்று (ஜூலை 12) பிற்பகல் விசாரிக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன் முறையீடு செய்தார்.

இதைக் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை (ஜூலை 13) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து வரும் ஜூலை 25 ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போல வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்ற உத்தரவிடக்கோரி ஒ.பன்னீர்செல்வம் தரப்பிலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தாங்கள் தான் உண்மையான அதிமுக என குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுக தலைமையகத்திற்கு சீல் வைத்த விவகாரம்: இருதரப்பினரும் ஆஜராக நோட்டீஸ்

Last Updated :Jul 12, 2022, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.