ETV Bharat / briefs

கணவர் இறந்த அதே நாளில் தாய், மகன் தற்கொலை

author img

By

Published : Jun 3, 2020, 9:59 PM IST

Cuddalor Mom and son suicide
Cuddalor Mom and son suicide

கடலூர்: கணவர் இறந்த அதே நாளில் தாய், மகன் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் கோண்டூர் சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் முத்து. இவர் கடந்த வருடம் உடல்நலக் குறைவால் இறந்தார். இவருடைய மனைவி லதா (60), மகன் சேதுராமன் (25) இருவரும் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று லதாவின் வீடு நீண்ட நேரமாகியும் பூட்டியே கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது லதாவும், சேதுராமன் ஆகிய இருவரும் இறந்து கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர், கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவலர்கள், வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் ஒரு விஷ பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் கடந்த வருடம் இதே நாளில் லதாவின் கணவர் உடல்நலக்குறைவால் இறந்ததுள்ளார். அதே நாளில் இன்று இருவரும் தற்கொலை செய்துள்ளனர்.

மேலும் இவர்கள் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் இறந்த அதே நாளில் தாய், மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.