ETV Bharat / bharat

மத்திய அமைச்சர்கள் இருவர் ராஜினாமா - காரணம்?

author img

By

Published : Jul 6, 2022, 7:02 PM IST

மத்திய அமைச்சர்கள் இருவர் ராஜினாமா - காரணம் என்ன?
மத்திய அமைச்சர்கள் இருவர் ராஜினாமா - காரணம் என்ன?

மத்திய அமைச்சர்களான முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ஆர்சிபி சிங் ஆகிய இருவரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் உருக்காலைத்துறை அமைச்சர் ஆர்சிபி சிங் ஆகியோர் தங்களுடைய அமைச்சர் பதவியை இன்று (ஜூலை 6) ராஜினாமா செய்துள்ளனர். இந்த இருவரும் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நாளை ஜூலை 7ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்பதால், அதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்துள்ளனர்.

மாநிலங்களவையில் உறுப்பினராக இருக்கும் மத்திய அமைச்சர்கள், தங்களது பதவிக்காலம் நிறைவடையும்போது மீண்டும் அது தொடர வாய்ப்பளிக்கப்படாமல் பதவி விலகுவது இதுவே முதல் முறையாகும். நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, எம்.பி பதவிக்காலம் முடிந்து விட்டாலோ அல்லது தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக அமைச்சராகவோ ஒருவர் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டால், அவர் பதவியேற்ற நாளில் இருந்து ஆறு மாத காலங்களுக்குள் மக்களவையில் இருந்தோ அல்லது மாநிலங்களவையில் இருந்தோ உறுப்பினராக தேர்வாகலாம்.

ஆனால், முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ஆர்.சி.பி.சிங் ஆகிய இருவரின் பதவிக்காலம் நிறைவுக்கு வருவதை அறிந்தும், அவர்கள் மீண்டும் எம்பியாக வாய்ப்பு தரப்படுமா என்பதை பாஜக இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த இருவருக்கும் பிரதமர் மோடி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

முன்னதாக இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் முன்பாகவே, முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ஆர்சிபி சிங் ஆகிய இருவரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "தெலங்கானாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்"- திரிவேந்திர சிங் ராவத்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.