காஷ்மீரில் திடீரென தீப்பற்றிய பேருந்து - 3 பேர் உயிரிழப்பு; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

author img

By

Published : May 13, 2022, 9:31 PM IST

ஜம்மு காஷ்மீரில் திடீரென தீப்பற்றிய பேருந்து- 3 பேர் உயிரிழப்பு அபாயம் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர்: ஜம்முவில் இருந்து கட்ரா பயணித்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் கட்ரா பகுதியில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கர்மல் என்னும் பகுதியைப் பேருந்து கடக்கும்போது நடந்துள்ளது. இந்த விபத்தில் 22-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஓடும் பேருந்தில் திடீரென எப்படி தீ பரவியது என்பதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. முதல்கட்ட தகவலில் தீ முதலில் பேருந்தின் இன்ஜின் பகுதியில் ஏற்பட்டதாகவும், பின்பு மளமளவென பேருந்து முழுவதும் பரவியதாகவும் கூறப்படுகிறது.

படுகாயத்திற்குள்ளான அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதையும் படிங்க: காஷ்மீரில் பண்டிட் சுட்டுக்கொலை - தொடரும் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.