ETV Bharat / bharat

மோடிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக கைதான டீஸ்டா செதல்வாட்டிற்கு இடைக்கால ஜாமீன்

author img

By

Published : Sep 2, 2022, 4:44 PM IST

சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட்டிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

டீஸ்டா செடல்வாட்டுக்கு இடைக்கால ஜாமீன்
டீஸ்டா செடல்வாட்டுக்கு இடைக்கால ஜாமீன்

டெல்லி: கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 25ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, போலி ஆதாரங்களை வைத்து இந்த வழக்கை தொடர்ந்ததாக, முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார், மும்பையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இருவரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனு அளித்தனர். அந்த மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் மனுகளைத் தொடர்ந்தனர். இந்நிலையில், இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யூயூ லலித், நீதிபதி ரவீந்திர பட், நீதிபதி சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (செப். 2) விசாரணை மேற்கொண்டது.

அப்போது, டீஸ்டா செதல்வாட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், குஜராத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிணை மனு மீது தீர்ப்பு வெளியாகும் வரை, அவரின் பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும், டீஸ்டா செதல்வாட்டை இவ்வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐஎன்எஸ் விக்ராந்த் பாதுகாப்புத்துறையின் மாற்றத்திற்கான எடுத்துக்காட்டு - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.