டெல்லி : நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவின் தானேவில் 151.33 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் திங்கள்கிழமையும் (ஜூலை 19) இடியுடன் கூடிய கனமழை உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மலை பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் (மேற்கு) மற்றும் பிகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் 2-3 மணி நேரம் வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஹரியானா மற்றும் குருகிராம் பகுதிகளில் மழை பெய்தது.
மேற்கூறிய மாநிலங்களில் நேற்று போல் இன்றும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாடு, வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!