ETV Bharat / bharat

'வங்கி மோசடிகளுக்கு' காரணம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் - பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு!

author img

By

Published : Jul 22, 2023, 3:21 PM IST

'வங்கி மோசடிகளுக்கு' காரணம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் - பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு!
'வங்கி மோசடிகளுக்கு' காரணம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் - பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாக 'ஃபோன் பேங்கிங்' மோசடி திகழ்ந்தது. இது நாட்டின் வங்கி முறையின் முதுகெலும்பை உடைக்கும் விதத்தில் இருந்ததாக, பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.

டெல்லி: இந்தியா முழுவதும் 44 இடங்களில் நடைபெற்ற ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற 70,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு, பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி, விர்சுவல் முறையில் வழங்கினார். பணி நியமன ஆணை பெற்றவர்களில் பெரும்பாலோர் வங்கித் துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். பின்னர் காணொலி காட்சி முறையில், பிரதமர் மோடி, சிறப்புரையாற்றினார். இந்த உரையில், எதிர்க்கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார்.

அவர் மேலும் கூறியதாவது, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், பொதுத்துறை வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடி இழப்பு மற்றும் செயல்படாத சொத்துக்களுக்கு (NPA) பெயர் பெற்றதாக விளங்கி வந்தன. அவைகள் தற்போது, லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாறி உள்ளன. 'ஃபோன் பேங்கிங்' மோசடி, முந்தைய அரசாங்கத்தின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. மேலும் இது நாட்டின் வங்கி முறையின் முதுகெலும்பை உடைத்துவிட்டது எனக் குறிப்பிட்டு உள்ளார்.

சக்திவாய்ந்த சில தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் கடன்களை வழங்குவதற்கு தொலைபேசி வங்கி முறையைப் பயன்படுத்திய முந்தைய அரசாங்கத்தின் கீழ் வங்கித் துறை எவ்வாறு "அழிக்கப்பட்டது" என்பதை பிரதமர் எடுத்துரைத்து உள்ளார். சிறு வங்கிகளை இணைப்பதன் மூலமும், நிபுணத்துவத்தை புகுத்துவதன் மூலமும் வங்கிகளின் நிர்வாகத்தை வலுப்படுத்த தனது அரசாங்கம் எடுத்த பல நடவடிக்கைகளையும், பிரதமர் மோடி பட்டியலிட்டு உள்ளார்.

தற்போது சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவித்து உள்ள பிரதமர் மோடி, இந்திய நாட்டின் மீது உருவாகி வரும் உலகளாவிய நம்பிக்கை மற்றும் ஈர்ப்பை முழுமையாகப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்பும் பொருட்டு, நாடு முழுவதும் 44 இடங்களில் ரோஜ்கர் மேளா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. புதிதாக பணி நியமன ஆணைகளை பெற்றவர்கள், பல்வேறு அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள பணியிடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இளம் தலைமுறையினருக்கு தகுதியான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்மயோகி பிரரம்ப் ஆன்லைன் மாட்யூல் பிரிவின் கீழ் 580-க்கும் மேற்பட்ட மின்-கற்றல் படிப்புகளுடன் 'எங்கும்-எந்த சாதனமும்' கற்றல் வடிவத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியின் மூலம் அரசாங்கம் புதிய உந்துதலை அளித்து வருவதாக, அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: இலங்கை அதிபர் ரணிலுடன் கவுதம் அதானி சந்திப்பு.. கொழும்புவில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.