ETV Bharat / bharat

அம்பானி வீட்டருகே வெடிகுண்டு வாகன வழக்கு: விசாரணையில் என்ஐஏ

author img

By

Published : Mar 8, 2021, 3:32 PM IST

nia
மும்பை

மும்பை: அம்பானியின் வீட்டருகே வெடிகுண்டுகளுடன் வாகனம் நின்ற வழக்கானது, தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அல்டாமவுண்ட் சாலையில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிபொருள்களுடன் நின்ற வாகனம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

அந்த வாகனத்திலிருந்து ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. மேலும், அந்த வாகனத்திலிருந்து மிரட்டல் கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். தானேவில், அந்தக் காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரெனை, இறந்த நிலையில் காவல் துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மிரட்டல் கடிதத்தால், அம்பானியின் வீட்டிற்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உதவி கேட்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்புணர்வுசெய்த காவல் உதவி ஆய்வாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.