ETV Bharat / bharat

Coronavirus update: ஒரே நாளில் 8,309 பேருக்கு பாதிப்பு

author img

By

Published : Nov 29, 2021, 1:51 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 236 பேர் உயிரிழந்துள்ளனர்.

Covid-19 cases
Covid-19 cases

கோவிட்-19 தினசரி நிலவரம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (நவ. 28) எட்டாயிரத்து ஆயிரத்து 309 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு, உயிரிழப்பு நிலவரம்

இதனால், மொத்த பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை மூன்று கோடியே 45 லட்சத்து 80 ஆயிரத்து 832ஆக அதிகரித்துள்ளது. நேற்று (நவ. 28) மட்டும் தொற்றால் 236 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 68 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 40 லட்சத்து எட்டாயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 859 ஆக உள்ளது.

அதிகபட்சமாக கேரளாவில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். அதற்கடுத்து மகாராஷ்டிராவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தமிழ்நாட்டில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

தடுப்பூசி திட்ட நிலவரம்

இதுவரை, மொத்தம் 122 கோடியே 57 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 78 கோடியே 55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 44 கோடிக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

நேற்று ஒரே நாளில் 41 லட்சத்ததுக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: Farm laws repeal bill: வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.