ETV Bharat / state

சர்வதேச யோகா தினம்: "சேரா யோகாத்தான் 2024" 400க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம்! - CHENNAI International Yoga Day

YOGA DAY: சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 400க்கும் மேற்பட்டோர் சூரிய நமஸ்காரம் யோகாசனம் மேற்கொண்டனர்.

நேரு உள்விளையாட்டு அரங்கம்
நேரு உள்விளையாட்டு அரங்கம் (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 16, 2024, 3:28 PM IST

சென்னை: சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ’சேரா யோகாத்தான் 2024’ என்ற நிகழ்வில் 8 வயதுக் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கலந்து கொண்ட சூரிய நமஸ்காரம் யோகா போட்டி நடைபெற்றது.

’சேரா யோகாத்தான் 2024’ (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)

இந்நிகழ்வில் 400க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்கார யோகாசனம் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் இந்திய யோகா சங்கச் செயலாளர் இளங்கோவன், திருமூலர் யோகா மற்றும் இயற்கை உணவு அறக்கட்டளை யோகி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய யோகா சங்கச் செயலாளர் இளங்கோவன் கூறுகையில், "இந்த சூரிய நமஸ்காரம் பயிற்சிகள் உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை ஆதிகாலத்திலிருந்து சூரிய நமஸ்காரம் பயிற்சிகள் இருந்து வருகிறது. ஆதித்யா கிருதயம் என்று சொல்லக்கூடிய இந்த சூரிய நமஸ்காரம் இன்று உலகம் முழுவதற்கும் சென்று உள்ளது. சமீபத்தில் கூட பாகிஸ்தானில் இந்த யோகா பயிற்சிகள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை இது ஆன்மீக ரீதியாகப் பார்க்கப்பட்டாலும், உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் திறன் பயிற்சிக்காகவும் இந்த சூரிய நமஸ்காரம் செய்யப்படுகிறது . இந்த யோகா பயிற்சி ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதுடன், ஹார்மோன்களை கட்டுப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

இதனால் உடலில் இருக்கக்கூடிய கோடிக்கணக்கான செல்கள் சிறப்பாக செய்யப்பட இது உதவுகிறது" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும், இந்திய யோகா சங்கச் செயலாளர் இளங்கோவன் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

இதையும் படிங்க: சர்க்கரை நோய்க்கு 2 வயது சிறுமி பலி- ஆண்டிப்பட்டியில் நிகழந்த சோகம்..!

சென்னை: சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ’சேரா யோகாத்தான் 2024’ என்ற நிகழ்வில் 8 வயதுக் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கலந்து கொண்ட சூரிய நமஸ்காரம் யோகா போட்டி நடைபெற்றது.

’சேரா யோகாத்தான் 2024’ (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)

இந்நிகழ்வில் 400க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்கார யோகாசனம் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் இந்திய யோகா சங்கச் செயலாளர் இளங்கோவன், திருமூலர் யோகா மற்றும் இயற்கை உணவு அறக்கட்டளை யோகி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய யோகா சங்கச் செயலாளர் இளங்கோவன் கூறுகையில், "இந்த சூரிய நமஸ்காரம் பயிற்சிகள் உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை ஆதிகாலத்திலிருந்து சூரிய நமஸ்காரம் பயிற்சிகள் இருந்து வருகிறது. ஆதித்யா கிருதயம் என்று சொல்லக்கூடிய இந்த சூரிய நமஸ்காரம் இன்று உலகம் முழுவதற்கும் சென்று உள்ளது. சமீபத்தில் கூட பாகிஸ்தானில் இந்த யோகா பயிற்சிகள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை இது ஆன்மீக ரீதியாகப் பார்க்கப்பட்டாலும், உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் திறன் பயிற்சிக்காகவும் இந்த சூரிய நமஸ்காரம் செய்யப்படுகிறது . இந்த யோகா பயிற்சி ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதுடன், ஹார்மோன்களை கட்டுப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

இதனால் உடலில் இருக்கக்கூடிய கோடிக்கணக்கான செல்கள் சிறப்பாக செய்யப்பட இது உதவுகிறது" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும், இந்திய யோகா சங்கச் செயலாளர் இளங்கோவன் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

இதையும் படிங்க: சர்க்கரை நோய்க்கு 2 வயது சிறுமி பலி- ஆண்டிப்பட்டியில் நிகழந்த சோகம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.