ETV Bharat / bharat

போலீஸ் காவலில் மளிகை கடைக்காரர்  உயிரிழப்பு

author img

By

Published : Nov 4, 2022, 3:39 PM IST

Death of youth in police custody triggers uproar in Prayagraj
Death of youth in police custody triggers uproar in Prayagraj

உத்தரப் பிரதேச மாநிலத்தில் போலீஸ் காவலில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் மளிகை கடை உரிமையாளர் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரயாக்ராஜ் எஸ்பி சந்தோஷ் குமார் மீனா கூறுகையில், தரகஞ்ச் பகுதியில் நேற்றிரவு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் தரகஞ்ச் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்தனர். அப்போது, லோகேஷ் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.

அதன்பின் அவருக்கு கரோனா பரிசோதனை செய்ய காவலர்கள் மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரது உடல் நிலை மோசமானது. சிறிது நேரத்துக்கு பின் உயிரிழந்தார். இதனிடையே தரகஞ்ச் போலீசார் தாக்கியதாலேயே லோகேஷ் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அவரது உடலை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளோம. முழு விசாரணை நடத்த உத்தவிட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெண் ஐபிஎஸ்-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - விழுப்புரம் நீதிபதி அதிருப்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.