ETV Bharat / bharat

24 மணி நேரத்தில் 5 ஆயிரம் பேருக்கு கரோனா.. மீண்டும் லாக்டௌன்?

author img

By

Published : Jun 8, 2022, 10:01 AM IST

Covid
Covid

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரம் பேருக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி: நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பெருந்தொற்றுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 5 ஆயிரத்து 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக புதன்கிழமை (ஜூன் 8) காலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர செய்திக் குறிப்பில், “நேற்று ஒரே நாளில் சிகிச்சைக்கு பின்னர் நாடு முழுக்க 3 ஆயிரத்து 345 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆக மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 857 ஆக உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டில் 3 ஆயிரத்து 714 கரோனா பெருந்தொற்று பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. 7 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன. அதிகப்பட்சமாக மும்பையில் 1,242 பேருக்கு புதிதாக கரோனா பெருந்தொற்று பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.

அதற்கு முந்தைய தினம் பாதிப்பு 676 ஆக இருந்தது. தமிழ்நாட்டிலும் புதிதாக கரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. நூற்றுக்கு கீழான எண்ணிக்கையில் இருந்த பாதிப்புகள் தற்போது நூறு-ஐ கடந்து பதிவாகிவருகின்றன.

நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதிப்புகள் அதிகரித்துவருவதால் மக்களிடையே மீண்டும் லாக்டௌன் (பொது முடக்கம்) வருமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் 5 லட்சம் பேருக்கு பரிசோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.