ETV Bharat / bharat

24 மணி நேரத்தில் 5 லட்சம் பேருக்கு பரிசோதனை!

author img

By

Published : Apr 30, 2022, 2:53 PM IST

Coronavirus
Coronavirus

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 96 ஆயிரத்து 640 பேர் கோவிட் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

புது டெல்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 688 பேர் கோவிட் பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்று 3 ஆயிரத்து 377 ஆக இருந்தது. ஆக பாதிப்பு 300 அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் 3,688 பேர் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிப்பு 50 ஆக உள்ளது. அந்த வகையில் மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 23 ஆயிரத்து 803 ஆக உயர்ந்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதனால் தினந்தோறும் தொற்று பாதிப்பும் 0.04 சதவீதம் உயர்ந்துள்ளது. சிகிச்சைக்கு பின்னர் குணமடைவோர் விகிதமும் 98.74 ஆக உள்ளது. இதற்கிடையில் நேற்று 4 லட்சத்து 96 ஆயிரத்து 640 பேர் பரிசோதனை செய்துகொண்டுள்ளனர். சனிக்கிழமை (ஏப்.30) நிலவரப்படி நாட்டு மக்களுக்கு 188.89 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : ஐஐடியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 196 ஆக அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.