ETV Bharat / bharat

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த காட்டு யானை!

author img

By

Published : Sep 1, 2020, 10:40 PM IST

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த காட்டு யானை!
Karnataka elephant dead

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் கடாபா தாலுகாவின் கொம்பாரு கிராமத்தில் இன்று (செப். 1) அதிகாலை மின்கம்பம் சாய்ந்து, மின்சாரம் பாய்ந்து காட்டு யானை ஒன்று உயிரிழந்தது.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை, வனத் துறை அலுவலர்கள் யானையை மீட்டு சோதனை செய்தனர்.

அதில், யானைக்கு 35 முதல் 40 வயது இருக்கக்கூடும் எனத் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் அடிக்கடி யானைகள் வலம் வருவதால் அதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.