ETV Bharat / bharat

'இந்திய-ஐரோப்பா உறவை மேம்படுத்த உடனடியாக களத்தில் இறங்க வேண்டும்'

author img

By

Published : Jul 16, 2020, 12:06 AM IST

உச்சிமாநாட்டில் உரைத்த பிரதமர்
உச்சிமாநாட்டில் உரைத்த பிரதமர்

டெல்லி: இந்தியா-ஐரோப்பா உறவை மேம்படுத்த உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என்று இந்திய-ஐரோப்பா யூனியன் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

15ஆவது இந்திய-ஐரோப்பா யூனியன் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இந்திய-ஐரோப்பா யூனியன் நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும். அதை நாம் உடனடியாக செய்ய களத்தில் இறங்க வேண்டும். இந்திய-ஐரோப்பா யூனியன் ஒரு ‘இயற்கை பங்காளர்கள்’. இந்த பங்களிப்பு உலக அமைதிக்கும், நிலைப்புத்தன்மைக்கும் உந்துகோலாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

உச்சிமாநாட்டில் உரைத்த பிரதமர்

மேலும், "இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் உலகின் மதிப்புகளான ஜனநாயகம், பன்மைத்துவம், சர்வதேச நிறுவனங்களுக்கு மரியாதை, சுதந்திரம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்கு மதிப்பளித்து நிலைநாட்டுகின்றன” என்றார்.

இதையும் படிங்க...கல்வான் மோதலில் உயிரிழந்த சீன வீரர்களுக்கு இறுதி மரியாதை அளிக்க மறுக்கும் சீனா - அமெரிக்க உளவுத்துறை தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.