சர்வதேச மணல் சிற்பத் திருவிழா ஒடிசாவின் சந்திரபாகா கடற்கரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2015ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மணல் சிற்பத் திருவிழா கொண்டாடப்பட்டுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமாக நடத்தப்படும் இந்த திருவிழாவில் ஆடப்படும் நடனம் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.
இந்த ஆண்டு இந்த திருவிழாவை ஒடிசா சுற்றுலாத் துறையோடு இணைந்து, மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் நடத்துகிறார். மணல் சிற்பங்களை கொண்டாடுவதற்கும், மணல் சிற்ப கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கும் இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த திருவிழாவின் விளம்பரத் தூதராக சுதர்சன் பட்நாயக்கே நியமிக்கப்பட்டுள்ளார். இதில் மெக்சிகோ, ஸ்பெயின், சிங்கப்பூர், நார்வே, ஜெர்மனி, நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் மணல் சிற்பக் கலைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர். சிறந்த மணல் சிற்பத்தை அமைப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஷில்லாங்கில் செர்ரி மலர் திருவிழா: குவியும் சுற்றுலாப் பயணிகள்