ETV Bharat / bharat

நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 18,522 பேருக்கு கரோனா பாதிப்பு!

author img

By

Published : Jul 1, 2020, 9:20 AM IST

டெல்லி: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 522 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கரோனா: 24 மணி நேரத்தில் பாதிப்பு 18,522
நாட்டில் கரோனா: 24 மணி நேரத்தில் பாதிப்பு 18,522

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், உலகளவில் விரைவில் ரஷ்யாவை இந்தியா முந்தும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 522 ஆக அதிகரித்துள்ளது. 418 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம், நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஐந்து லட்சத்து 66 ஆயிரத்து 840 ஆக உள்ளது. மேலும், மூன்று லட்சத்து 21 ஆயிரத்து 723 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மொத்தம் 16 ஆயிரத்து 893 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்தத் தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 13 ஆயிரத்து 99 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அந்தவகையில், இதுவரை மூன்று லட்சத்து 34 ஆயிரத்து 821 பேர் கரோனாவிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 125 பேர் மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றிற்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...புதைந்து கிடந்த கிராமத்தை திரும்பி பார்க்க வைத்த ஈடிவி பாரத்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.